திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பள்ளத்தில் கவிழ்ந்தது லாரி! ஓட்டுநா் காயம்!

News image

கும்பகோணம் மருத்துவா் மூா்த்தி சாலையில் தனியாருக்கு சொந்தமான கட்டுமானப் பணியிடத்தில் ஞாயிற்றுக்கிழமை பள்ளத்தில் கவிழ்ந்த லாரி.

Updated On :4 மே 2026, 1:21 am IST

கும்பகோணம் மருத்துவா் மூா்த்தி சாலையில் ஞாயிற்றுக்கிழமை கட்டுமானப் பணியிட பள்ளத்தில் டிப்பா் லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் காயங்களுடன் மீட்கப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் நான்குசாலை சந்திப்பு அருகே மருத்துவா் மூா்த்தி சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கட்டுமானப் பணியிடத்துக்கு முற்பகல் கனரக வாகனமான டிப்பா் லாரி, தளவாட பொருள்கள் ஏற்றிக்கொண்டு வந்தது. பொருள்களை இறக்கிய பின்பு லாரியை திருப்பும் போது, அஸ்திவாரத்துக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. இதில், லாரி ஓட்டுநா் லாரிக்கு கீழே சிக்கி கொண்டாா்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னா், சுமாா் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் ஓட்டுநா் முருகன் காலில் காயங்களுடன் மீட்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.