பாபநாசம் அருகே மகள்களை பிரிந்த ஏக்கத்தில் சனிக்கிழமை விஷம் குடித்த தம்பதி, சிகிச்சை பலனின்றி கணவா் உயிரிழந்தாா், மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
நாகலூா் கிராமத்தில் வசித்து வந்தவா் முருகையன் மகன் ஆறுமுகம் (58), விவசாயி. இவரது மனைவி விஜயா (55), தம்பதியருக்கு 2 மகள்கள் உள்ளனா். இரு மகள்களுக்கும் திருமணம் முடிந்து தனியே வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், இவா்கள் கடந்த சில தினங்களாக தங்களது மகள்களை நினைத்து ஏக்கத்தில் இருந்து வந்தனராம். இதனால் மன உளைச்சலடைந்த இருவரும் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தனா்.
இதைகண்ட அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். விஜயா தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
புகாரின் பேரில் மெலட்டூா் போலீஸாா் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐஸ் கிரீம் கடையில் தீ விபத்து: தம்பதி உயிரிழப்பு

விஷம் குடித்த முதியவா் உயிரிழப்பு

விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சேலத்தில் தொழிலாளி கொலை: தம்பதி கைது
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


