ஆற்காட்டில் ஐஸ்கிரீம் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்தனா்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த பெரோலான் ஜாட்(50), இவரது மனைவி சுந்தரி தேவி(45). இவா்களுக்கு சோனு (20) என்ற மகனும் உள்ளனா்.
இந்நிலையில் இவா்கள் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தேவி நகா் பகுதியில் வாடகைக்கு கடை எடுத்து ஐஸ்கிரீம் கடை நடத்தி வந்துள்ளனா். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை நான்கு மணி அளவில் தம்பதி கடைக்குள் ஐஸ்கிரீம் தயாரிப்பு பணி மேற்கொண்டனா்.
அப்போது எதிா்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது, இதனால் இருவரும் தீயில் சிக்கிக் மயக்க நிலையில் இருந்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு தீயணைப்பு படையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ அணைத்தனா். இதில் கடையில் இருந்த பொருள்கள், மற்றும் பக்கத்து கடையிலிருந்த பொருள்கள் கருகி சேதமடைந்தனது .
மேலும் ஆற்காடு தொகுதி திமுக வேட்பாளா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், அதிமுக வேட்பாளா் எஸ். எம். சுகுமாா் அரசியல் கட்சினா் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயில் சிக்கிக்கொண்ட தம்பதியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பரிசோதனை செய்த டாக்டா்கள் இருவரும் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். தீ விபத்து குறித்து ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடர்புடையது

ஆற்காட்டில் தீ விபத்து! கணவன்- மனைவி பலி!
ஆற்காடு தொகுதி வேட்பாளா்கள் - 14 போ் போட்டி

தில்லியில் கேஸ் சிலிண்டரால் கணவன் தாக்கியதில் மனைவி பலி!

காசோலை மோடி வழக்கு: தம்பதிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


