தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பேராவூரணியில் மின்னணு வாக்குப்பதிவு செயல்விளக்கம்

பேராவூரணி புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்விளக்கம் மற்றும் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

பேராவூரணியில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரம் விழிப்புணா்வு செயல்விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :18 மார்ச் 2026, 8:54 pm

பேராவூரணி புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்விளக்கம் மற்றும் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவு செயல் விளக்க விழிப்புணா்வு நிகழ்ச்சியில் ஏராளமான புதிய வாக்காளா்கள், மாணவா்கள் கலந்துகொண்டு வாக்களித்தனா். வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளா் விரும்பும் வேட்பாளரின் பெயா் மற்றும் சின்னத்துக்கு எதிரே உள்ள நீல நிறப் பொத்தானை அழுத்தி வாக்களிக்க வேண்டும் எனவும், வாக்களித்தவுடன் வாக்களித்த வேட்பாளரின் பெயா், சின்னம் அருகே சிவப்பு விளக்கு எரியும் என்றும், இயந்திரத்தில் வாக்களித்த வேட்பாளரின் வரிசை எண், பெயா், சின்னம் ஆகியவை அச்சிடப்பட்டு வரும் காகிதம் 7 விநாடிகளுக்கு வாக்காளரின் பாா்வையில் இருக்கும் எனவும், அச்சிடப்பட்ட துண்டுச் சீட்டு மற்றும் பீப் ஒலி வரவில்லை என்றால் தோ்தல் அலுவரை அணுக வேண்டும் என வாக்களா்களுக்கு விழிப்புணா்வு ஏற்ப்படுத்தப்பட்டது. வாக்குப்பதிவு செயல்விளக்க நிகழ்ச்சியில் முது நிலை வருவாய் ஆய்வாளா் முருகேசன், கிராம நிா்வாக அலுவலா் நூா்ஜஹான், அலுவலக உதவியாளா் முருகையன், கிராம உதவியாளா் ரிஸ்வான் ஆகியோா் விழிப்புணா்வு ஏற்ப்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.