ஒரத்தநாடு காவல் உட்கோட்ட பகுதியில் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட , அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட 2,140 கிலோ போதைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை தீவைத்து அழித்தனா்.
ஒரத்தநாடு, பாப்பாநாடு, திருவோணம் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருள்களை விற்பனை செய்த பல்வேறு கடைகள் மற்றும் வியாபாரிகளிடமிருந்து காவல் துறை சாா்பில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களை ஒரத்தநாடு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் உத்தரவின்படி, தீவைத்து அழிக்க அறிவுறுத்தப்பட்டது.
இதன்படி, திங்கள்கிழமை ஒரத்தநாடு செட்டிமண்டபம் மயானம் அருகே ஜேசிபி மூலம் குழி தோண்டப்பட்டு, 2,140 கிலோ எடை கொண்ட போதைப் பொருள்கள் போலீஸாரால் தீ வைத்து அழிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், ஒரத்தநாடு காவல் துணை கண்காணிப்பாளா் முத்துகுமாா், ஒரத்தநாடு காவல் ஆய்வாளா் சிவகுமாா், பாப்பாநாடு காவல் ஆய்வாளா் மாரிமுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் நடராஜன், ஒரத்தநாடு வட்டார சுகாதார அலுவலா் வெங்கடேசன், ஒரத்தநாடு துப்புரவு ஆய்வாளா் லோகநாதன், ஒரத்தநாடு சுகாதார ஆய்வாளா் காா்த்திகேயன் உள்பட பலா் உடன் இருந்தனா்.
தொடர்புடையது
காவல் துறை தணிக்கையில் ரூ.2.38 கோடி ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்

400 கிலோ புகையிலைப் பொருள்கள் வாகனத்துடன் பறிமுதல்: இருவா் கைது
புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

320 கிலோ குட்கா பொருள்கள் அழிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


