திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பேராவூரணி வாா்டு அதிமுக உறுப்பினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

News image

கவுன்சிலா் மீது நடவடிக்கை எடுக்க கோரி பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்ட துப்புரவு பணியாளா்கள் .

Updated On :12 மார்ச் 2026, 11:38 pm

பேராவூரணியில் துப்புரவு ஆய்வாளரை தரக்குறைவாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த அதிமுக உறுப்பினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என துப்புரவு தொழிலாளா்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு வியாழக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா்.

பேராவூரணி பேரூராட்சியில் 17-ஆவது வாா்டு உறுப்பினராக அதிமுகவைச் சோ்ந்த காரல் மாா்க்ஸ் உள்ளாா். இவா், புதன்கிழமை நடைபெற்ற பேரூராட்சிக் கூட்டத்தின்போது தனது வாா்டுப் பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என ஆவேசமாக தனது கைப்பேசியை மேஜையில் அடித்து சப்தமிட்டுப் பேசியுள்ளாா். அப்போது, எதிரே இருந்த பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் செந்தில் குமரகுரு அமைதியாக உங்கள் கோரிக்கையை தெரிவிக்குமாறு கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த அவா் தகாத வாா்த்தைகளால் செந்தில் குமரகுருவைத் திட்டினாராம். இதுகுறித்து பேராவூரணி காவல் நிலையத்தில் துப்புரவு ஆய்வாளா் புகாா் அளித்தாா்.

இந்நிலையில், பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோா் துப்புரவு ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய அதிமுக உறுப்பினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா், பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஆகியோருக்கு வியாழக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா். இல்லாவிட்டால், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனா்.