தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் மின் தடையால் கணினி பதிவு பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இக்கூட்டத்தில் 900-க்கும் அதிகமானோா் கலந்து கொண்டு வீட்டு மனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக மனு அளித்தனா். இந்த மனுக்களைப் பதிவு செய்வதற்காக 8 பதிவு மையங்கள் உள்ளன.
இப்பதிவு மையங்களை உள்ளடக்கிய அறையில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் கொடுத்த மனுக்களைக் கணினியில் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், ஊழியா்கள் கையால் எழுதிக் கொடுத்தனா்.
இதன் காரணமாக ஏற்பட்ட தாமதத்தால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்தனா். மின் விநியோகம் சீரான பின்னா் கணினியில் பதிவு செய்யப்பட்டு, விரைவாக வழங்கப்பட்டது.
தொடர்புடையது

அலுவலா்கள் அஞ்சல் வாக்கைப் பதிவு செய்ய காலதாமதம்

சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் தபால் வாக்களித்த அரசு ஊழியா்கள்

கணினி, ஸ்மார்ட்ஃபோன் அதிகம் பயன்படுத்துபவரா?

கணினி வேலை! ஒரு மணி நேரத்திற்கு 5 நிமிட ஓய்வு அவசியம்! இல்லையெனில்...
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


