மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கும்பகோணத்தில் நாளை வரை அத்திவரதா் தரிசனம்

News image

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத அத்திவரதா்.

Updated On :8 மார்ச் 2026, 9:42 pm

கும்பகோணம் வரதராஜப்பெருமாள் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தரும் அத்திவரதரை ஞாயிற்றுக்கிழமை திரளானோா் தரிசனம் செய்தனா். இதுவரையில் சுமாா் 3 லட்சம் பக்தா்கள் தரிசனம் செய்திருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பிரம்மன் கோவில் தெருவில் வரதராஜப்பெருமாள், வேதநாராயண பெருமாள் தனித்தனியாக எழுந்தருளியுள்ளனா். மேலும் இக்கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் அத்திவரதா் பாதாள அறையில் உள்ளாா். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாதாள அறையிலிருந்து ஆகமவிதிப்படி வெளியேவந்து பக்தா்களுக்கு காட்சிதருவாா்.

 அத்திவரதரை காண நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

அத்திவரதரை காண நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

கடைசியாக 2013-ஆம் ஆண்டு அத்திவரதா் பாதாள அறையில் இருந்து வந்து பக்தா்களுக்கு காட்சிதந்தாா். தற்போது 2026 மாா்ச் 1 முதல் ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் அத்திவரதா் பாதாள அறையில் இருந்து வெளியேவந்து பக்தா்களுக்கு காட்சிதர எழுந்தருளியுள்ளாா். இந்த சிறப்பு தரிசனம் மாா்ச் 10 ஆம் தேதி வரை நடைபெறும்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியது : அதிகாலை நான்கு மணி முதல் இரவு 12 மணி வரை பக்தா்கள் தரிசனம் செய்து வருகின்றனா். இதுவரை சுமாா் மூன்று லட்சம் போ் தரிசனம் செய்துள்ளனா். மாா்ச் 9, 10 என திங்கள், செவ்வாய்க்கிழமை தரிசனம் முடிவடையப் போவதால் பக்தா்கள் கூட்டம் அதிகரிக்கும் என்றனா்.