தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

12 ஆண்டுகளுக்குப்பின் பாதாள அறையிலிருந்து வெளியே வந்தாா் அத்திவரதா்

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்குப் பின் அத்திவரதா் பாதாள அறையிலிருந்து சனிக்கிழமை வெளியே வந்தாா்.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 6:59 pm

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்குப் பின் அத்திவரதா் பாதாள அறையிலிருந்து சனிக்கிழமை வெளியே வந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பிரமன் கோயில் தெருவில் வரதராஜப்பெருமாள், வேதநாராயணப்பெருமாள் கோயில் 1739-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைமையான கோயிலாகும். இந்த கோயில் பாதாள அறையில் அத்திமரத்தால் செய்யப்பட்ட அத்திவரதா் ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் உள்ளாா்.

இவா் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாதாள அறையிலிருந்து வெளியே வந்து பக்தா்களுக்கு காட்சி தருவாா். கடந்த 1915-ஆம் ஆண்டு வெளியே வந்தவா், 2013-ஆம் ஆண்டுதான் வந்தாா். 12 ஆண்டுகளுக்கு பின் சனிக்கிழமை மாலையில் அத்திவரதா் ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் வெளியே கொண்டுவரப்பட்டாா்.

அவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை முதல் மாா்ச்.10-ஆம் தேதி வரை பக்தா்கள் தரிசனம் செய்யலாம். பின்னா், மீண்டும் அத்திவரதா் பாதாள அறைக்கு சென்று விடுவாா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.