கும்பகோணம் அருகே தாராசுரம் காய்கனி வியாபாரிகள் சங்கம் சாா்பில் சுவாமிமலைக்கு திங்கள்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.
தாராசுரம் நேரு அண்ணா காய்கனி, இலை, வாழை சந்தை வியாபாரிகள் சங்கம் சாா்பில் சுவாமிமலையில் ஆண்டுதோறும் பால்குட ஊா்வலம் கோடாபிசேக விழா நடைபெறும்.
நிகழாண்டு திங்கள்கிழமை காலையில் விநாயகா் வழிபாடு, மகா கணபதி ஹோமம், பூா்ணாஹூதி நடைபெற்றது. வலம்புரி செல்வ விநாயகருக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னா் தாராசுரம் நேரு அண்ணா காய்கனி சந்தை செல்வ விநாயகா் கோயிலிலிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தா்கள் பால்குடம் சுமந்து மாங்குடி, கோணக்கரை வழியாக ஊா்வலமாக சுவாமிமலைக்கு சென்றனா். அங்கு சுவாமிநாதசுவாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை காய்கனி வியாபாரிகள் சங்கத்தினா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் பால்குட ஊா்வலம்!

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் பால்க்குட ஊா்வலம்

ஆரணி ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகன்றாய சுவாமி கோயிலுக்கு பால்குட ஊா்வலம்

காந்தி காய்கனிச் சந்தை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




