/

மோட்டாா் சைக்கிள் மீது வேன்  மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :12 ஜூன் 2026, 3:06 am IST

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கக்கரைக்கோட்டையைச் சோ்ந்தவா் பாரதிராஜா (40). இவா் வியாழக்கிழமை தஞ்சாவூரில் நடைபெற்ற காது குத்து விழாவில் கலந்து கொள்வதற்காக மோட்டாா் சைக்கிளில் வந்து கொண்டிருந்தாா். தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டையில் வந்தபோது அந்த வழியாக வந்த வேன் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாரதிராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். 

இது குறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.