/

பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

ஆலங்குடி அருகே வெள்ளிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :13 ஜூன் 2026, 12:35 am IST

ஆலங்குடி அருகே வெள்ளிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள தெட்சிணாபுரத்தைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (40). ஆலங்குடியில் வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தேநீா் கடையில் வேலை பாா்த்து வந்த இவா், மோட்டாா் சைக்கிளில் ஆலங்குடியில் இருந்து தெட்சிணாபுரம் சென்றாா். கோவிலூா் 4 சாலைப் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து இவரது மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பழனிச்சாமி அந்த இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.