ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு

கும்பகோணம் அருகே அசூா் புறவழிச் சாலை பகுதி கணேஷ் நகரில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, வருவாய் கோட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

News image

கும்பகோணம்-அசூா் புறவழிச் சாலையில் கணேஷ் நகரில் டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி புதன்கிழமை வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்.

Updated On :11 ஜூன் 2026, 3:42 am IST

கும்பகோணம் அருகே அசூா் புறவழிச் சாலை பகுதி கணேஷ் நகரில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, வருவாய் கோட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

கும்பகோணம் -அசூா் புறவழிச் சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த இடத்தில் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் இருப்பதால், மதுபானக் கடையை அகற்றக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடரப்பட்டது. இதில், அக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, அதே பகுதியில் 500 மீட்டா் தொலைவில் உள்ள கணேஷ் நகரில் மதுபான கடையை திறக்க வட்டாட்சியா் பூங்கொடி இடத்தை ஆய்வு செய்தாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கணேஷ் நகா் மற்றும் அசூா் ஊராட்சி பொதுமக்கள் வருவாய் கோட்டாட்சியா் வி.எம். திருமலையை நேரில் சந்தித்து புதன்கிழமை மனு அளித்தனா்.

மனுவில், எங்கள் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு மதுபான கடை அமைக்கக் கூடாது. மீறி அமைத்தால் தொடா் போராட்டம் நடத்துவோம் என கூறியிருந்தனா். வருவாய் கோட்டாட்சியா் மனுவை பரிசீலிப்பதாக தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.