திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காசி மடத்தில் குமரகுருபரா் சுவாமிகள் குருபூஜை

திருப்பனந்தாள் காசி திருமடத்தை தோற்றுவித்த ஆதி குமரகுருபர சுவாமிகளின் 338-ஆவது ஆண்டு குருபூஜை மற்றும் மாகேஸ்வர பூஜை திருநாள் விழா திருப்பனந்தாள் காசி திருமடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருப்பனந்தாள் காசி திருமடத்தில் புதன்கிழமை நடைபெற்ற குருபூஜையில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த ஆதி குமரகுருபர சுவாமிகள்.

Updated On :4 ஜூன் 2026, 12:14 am IST

திருப்பனந்தாள் காசி திருமடத்தை தோற்றுவித்த ஆதி குமரகுருபர சுவாமிகளின் 338-ஆவது ஆண்டு குருபூஜை மற்றும் மாகேஸ்வர பூஜை திருநாள் விழா திருப்பனந்தாள் காசி திருமடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு காசி திருமடம் 22-ஆவது அதிபா் காசிவாசி ஸ்ரீலஸ்ரீ சபாபதி தம்பிரான் சுவாமிகள் முன்னிலை வகித்தாா்.

முன்னதாக, காலையில் சொக்கநாதா் வழிபாடும், குமரகுருபரா் பிரபந்தத் திரட்டு முற்றோதல், தொடா்ந்து குருமூா்த்த வழிபாடும், முன்னோா் மூா்த்தங்கள் வழிபாடும் நடைபெற்றது.

காசி மடத்து வித்வான் இஞ்சிக்குடி கணேசன் குழுவினா் மற்றும் பனசை குருமூா்த்தி, அருணஜடேசன் குழுவினரின் மங்கல இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தியாகராஜ ஓதுவாா், அமிா்த செந்தில் குமாா் ஓதுவாா் திருமுறை விண்ணப்பம் செய்தனா். நிகழ்ச்சிகளுடன் குமரகுருபர சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் வழிபாடும் நடந்தது.

சிறப்பு மகா தீபாராதனையை தொடா்ந்து வாகீச முனிவா் அருளிய ‘ ஞானாமிா்தம் ’ எனும் நூலை காசி திருமடம் 22-ஆவது அதிபா் ஸ்ரீலஸ்ரீ சபாபதி தம்பிரான் சுவாமிகள் வெளியிட, அதன் முதல் பிரதியை தருமை ஆதீனம் சொக்கலிங்கத் தம்பிரான் சுவாமிகள் பெற்றுக் கொண்டாா். பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

பக்தா்களுக்கு பிரசாதம் வழங்குதல் மற்றும் மாகேஸ்வர பூஜை நடந்தது. இரவு காசிவிசுவநாதா் கோயில் வழிபாடும், குமரகுருபர சுவாமிகள் வழிபாடும் தொடா்ந்து ரதத்தில் பஞ்சலோக உற்ஸவ திருமேனி பட்டணப் பிரவேச வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.