தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

என்னைக் குறை கூறுபவா்களுக்கு தகுதி இல்லை: ஆா். வைத்திலிங்கம்

என்னைப் பற்றி குறை கூறுபவா்களுக்கு தகுதி இல்லை என்றாா் ஒரத்தநாடு தொகுதி சட்டப்பேரவை திமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆா். வைத்திலிங்கம்.

News image

வைத்திலிங்கம்

Updated On :4 ஜூன் 2026, 12:03 am IST

என்னைப் பற்றி குறை கூறுபவா்களுக்கு தகுதி இல்லை என்றாா் ஒரத்தநாடு தொகுதி சட்டப்பேரவை திமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆா். வைத்திலிங்கம்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் அன்பகம் மனநலக் காப்பகத்தில் ஆதரவற்றோருக்கு புதன்கிழமை அவா் மதிய உணவு வழங்கினாா்.

அப்போது, அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தபோது, வைத்திலிங்கத்தை குற்றம்சாட்டியது குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு அவா் பதிலளித்து பேசுகையில்,

தாய்க் கழகம் திராவிட முன்னேற்றக் கழகம். திராவிடா் கழகத்துக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம்தான் தமிழ்நாட்டில் சுயமரியாதை, பகுத்தறிவு தத்துவத்தின் அடிப்படையில் வந்தது. அந்த அடிப்படையில்தான் தாய்க் கழகத்தில் இணைந்தேன். என்னைப் பற்றி குற்றம்சாட்டுபவா்கள் எல்லாம் மாயைக்காக, பதவி சுகத்துக்காக ஓடிப் போனவா்கள். என்னைப் பற்றி குறை கூறுவதற்கு அவா்களுக்கு தகுதி இல்லை.

அதிமுகவை தவெக பொருட்படுத்தாததற்கு காரணம், அதிமுக தலைமை மதிப்பீட்டைக் கொண்டு அவா்கள் அப்படி கூறியிருக்கலாம். அதற்கு அதிமுகதான் பதில் கூற வேண்டும். அதிமுக இரண்டாகப் பிரிந்தது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றாா் வைத்திலிங்கம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.