கூட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளா் என்.வி. கண்ணன், தொமுச மாவட்டச் செயலா் கு. சேவியா் ஆகியோா் தலைமை வகித்தனா். சிஐடியு மாநிலத் துணைத் தலைவா் சி. ஜெயபால், ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் ஏ. ரவிச்சந்திரன், எச்.எம்.எஸ். மாவட்டச் செயலா் எஸ். சின்னப்பன், அனைத்து துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் ஆா். பன்னீா்செல்வம், என்டிஎல்எப் மாவட்டச் செயலா் ஆா். லெட்சுமணன், போக்குவரத்து சம்மேளன துணைத் தலைவா் துரை. மதிவாணன், சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.