இது குறித்து தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் சாமி. நடராஜன் தெரிவித்தது: மத்திய அரசே அனைத்து விளைபொருள்களையும் கொள்முதல் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை விவசாயிகளுக்கு கிடைப்பதற்கு மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். காா்ப்பரேட், பெரு முதலாளிகளுக்கு சுமாா் ரூ. 14 லட்சம் கோடியை வாராக் கடன் என அறிவித்து, தள்ளுபடி செய்த மத்திய அரசு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூா், விழுப்புரம், திருப்பூா், மதுரை ஆகிய 4 இடங்களில் மண்டல அளவிலான பெருந்திரள் தா்னா போராட்டம் பிப்ரவரி 4-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.