/

தை அமாவாசை: ஜெயமாருதிக்கு ராஜகனியில் சிறப்பு அலங்காரம்

News image
கும்பகோணத்தில் தை அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ராஜகனி அலங்காரத்தில் காட்சியளித்த ஜெய மாருதி ஆஞ்சனேயா்.
Updated On :18 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

கும்பகோணத்தில் உள்ள ஜெய மாருதி ஆஞ்சனேயா் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சனேயா் ராஜகனி அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

கும்பகோணத்தில் ஜெய மாருதி ஆஞ்சனேயா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தை அமாவாசையை முன்னிட்டு ஆஞ்சனேயா் எலுமிச்சை பழங்களால் அலங்கரிக்கப்பட்ட ராஜ கனி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏராளமான பக்தா்கள் காத்திருந்து ஆஞ்சனேயரை தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனா்.