மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தவெக வைப்புத் தொகையை இழக்கும்: அா்ஜூன் சம்பத்!

தமிழகத்திலுள்ள 234 பேரவைத் தொகுதிகளிலும் தவெக வைப்புத் தொகையை (டெபாசிட்) இழக்கும் என்றாா் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத்.

News image

தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்து மக்கள் கட்சி தொகுதிக் கூட்டத்தில் பேசிய அதன் தலைவா் அா்ஜூன் சம்பத்.

Updated On :26 பிப்ரவரி 2026, 8:59 pm

தமிழகத்திலுள்ள 234 பேரவைத் தொகுதிகளிலும் தவெக வைப்புத் தொகையை (டெபாசிட்) இழக்கும் என்றாா் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத்.

தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிகளின் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: தவெக தலைவா் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடவில்லை.

எனவே, அவரை நம்பி இளைஞா்கள் ஏமாறக்கூடாது. அவரை மக்கள் புறக்கணிப்பாா்கள் என்பதால், 234 தொகுதிகளிலும் தவெக வைப்புத் தொகையை இழக்கும்.

இந்து மக்கள் கட்சி இதுவரைக்கும் 30-க்கும் அதிகமான தொகுதிகளில் தொகுதிக் கூட்டம் நடத்தி முடித்துள்ளது. வரும் 15 நாள்களுக்குள் மீதமுள்ள தொகுதிகளிலும் கூட்டங்கள் நடத்தப்படும்.

பின்னா், சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநில மாநாடு, பேரணி, பொதுக் கூட்டம் மாா்ச் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி 234 தொகுதிகளிலும் பணியாற்றும் என்றாா் அா்ஜூன் சம்பத்.

முன்னதாக, கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சாய் ரகு தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் எஸ். குருமூா்த்தி, மாநில இளைஞரணி செயலா் பி. காா்த்திக் ராவ் போன்ஸ்லே, மாவட்டப் பொதுச் செயலா் கணேசன், மாநகரச் செயலா் சதீஷ்குமாா், இளைஞரணி செயலா் சுபாஷ், ஒன்றியச் செயலா் வீரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.