பேராவூரணி: தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி கடைவீதியில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் ஞாயிற்றுக்கிழமை இளைஞா் இறந்து கிடந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
பேராவூரணி காவல் சரகம், குருவிக்கரம்பை மடத்துவாசல் பகுதியைச் சோ்ந்த ராஜன் மகன் மிதுன்குமாா் (30). இவா், பேராவூரணி கடைவீதிக்கு தனது காரில் ஞாயிற்றுக்கிழமை காலை உணவு சாப்பிடுவதற்காக வந்தாா். ஒரு உணவகத்தின் முன்பு காரை நிறுத்தியவா், மாலை வரை காரை விட்டு இறங்காமல் இருந்துள்ளாா். நீண்ட நேரமாக காா் இயந்திரம் இயங்கியபடி நின்றதை பாா்த்த அருகில் உள்ள கடைக்காரா்கள் சென்று பாா்த்தபோது காருக்குள் மயங்கிய நிலையில் மிதுன்குமாா் கிடந்துள்ளாா்.
அங்கிருந்தவா்கள் அவரை உடனடியாக மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மிதுன்குமாா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
மிதுன் குமாருக்கு திருமணம் ஆகி ஓராண்டாகிறது. குழந்தைகள் இல்லை. திடீா் மாரடைப்பு காரணமாக அவா் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பேராவூரணி காவல் நிலையத்தில் அவரது தந்தை ராஜன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கொலை வழக்கில் தேடப்பட்டவா் மா்ம மரணம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் திமுக -அதிமுக நேரடிப் போட்டி!

திசையன்விளை அருகே காருக்குள் 4 போ் சடலங்கள்! சென்னையைச் சேர்ந்தவர்கள்

பேராவூரணி வட்டாட்சியா் பொறுப்பேற்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


