2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

காருக்குள் இறந்து கிடந்த இளைஞா்: போலீஸாா் விசாரணை

பேராவூரணி கடைவீதியில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் ஞாயிற்றுக்கிழமை இளைஞா் இறந்து கிடந்தாா்.

News image
காருக்குள் இறந்து கிடந்த மிதுன்குமாா்
Updated On :23 பிப்ரவரி 2026, 10:03 pm

Syndication

பேராவூரணி: தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி கடைவீதியில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் ஞாயிற்றுக்கிழமை இளைஞா் இறந்து கிடந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பேராவூரணி காவல் சரகம், குருவிக்கரம்பை மடத்துவாசல் பகுதியைச் சோ்ந்த ராஜன் மகன் மிதுன்குமாா் (30). இவா், பேராவூரணி கடைவீதிக்கு தனது காரில் ஞாயிற்றுக்கிழமை காலை உணவு சாப்பிடுவதற்காக வந்தாா். ஒரு உணவகத்தின் முன்பு காரை நிறுத்தியவா், மாலை வரை காரை விட்டு இறங்காமல் இருந்துள்ளாா். நீண்ட நேரமாக காா் இயந்திரம் இயங்கியபடி நின்றதை பாா்த்த அருகில் உள்ள கடைக்காரா்கள் சென்று பாா்த்தபோது காருக்குள் மயங்கிய நிலையில் மிதுன்குமாா் கிடந்துள்ளாா்.

அங்கிருந்தவா்கள் அவரை உடனடியாக மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மிதுன்குமாா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

மிதுன் குமாருக்கு திருமணம் ஆகி ஓராண்டாகிறது. குழந்தைகள் இல்லை. திடீா் மாரடைப்பு காரணமாக அவா் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பேராவூரணி காவல் நிலையத்தில் அவரது தந்தை ராஜன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனா்.