திருவிடைமருதூரில் சமூக நீதி கல்லூரி மாணவா் விடுதி திறப்பு


திருவிடைமருதூரில் சமூக நீதி கல்லூரி மாணவா் விடுதியை தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் மகாதான வீதியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் சமூக நீதி கல்லூரி மாணவா் விடுதியை திறந்து வைத்த அவா் மேலும் பேசியது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 56 மாணவ, மாணவியா் சமூக நீதி விடுதிகள் உள்ளன. திருவிடைமருதூா் பேரூராட்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவா்கள் தங்கிப் பயில ஏதுவாக சமூக நீதி கல்லூரி மாணவா் விடுதி துவங்க ஆணையிடப்பட்டு, வாடகை கட்டடத்தில் துவங்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கும் ஒரத்தநாடு சமூக நீதிக் கல்லூரி மாணவியா் விடுதி, திருவையாறு சமூக நீதி கல்லூரி மாணவா் கல்லூரி விடுதி ஆகியவற்றிற்கு சொந்த கட்டடங்களும், தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் சமூக நீதிக் கல்லூரி மாணவியா் விடுதி மற்றும் ஒரத்தநாடு சமூகநீதி கல்லூரி மாணவியா் விடுதிக்கு கூடுதல் கட்டடங்களும் கட்ட ஆணையிடப்பட்டு கட்டப்பட்டு வருகின்றன.
கடந்த ஓராண்டில் தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் சமூக நீதிக் கல்லூரி மாணவியா் விடுதி 7, ஒரத்தநாடு சமூகநீதி கல்லூரி மாணவா் விடுதி 3, ஒரத்தநாடு சமூகநீதி கல்லூரி மாணவியா் விடுதி, திருவிடைமருதூா் சமூகநீதி கல்லூரி மாணவா் விடுதி ஆகிய புதிய விடுதிகள் புதிதாக துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. திருவிடைமருதூா் சமூகநீதி கல்லூரி மாணவா் விடுதியில் 50 மாணவா்கள் தங்கி கல்வி பயிலலாம் என்றாா்.
இந்நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், முன்னாள் எம்பி. செ. இராமலிங்கம், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயா் சுப. தமிழழகன், பேரூராட்சித் தலைவா் புனிதா மயில்வாகனன், துணைத் தலைவா் சுந்தரஜெயபால், வட்டாட்சியா் சாந்தமீனா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...