டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மாணவா் விடுதி கட்ட நிலம் நன்கொடை அளித்த தலைமை ஆசிரியா்

ஆலங்குளம் அருகே மாணவா் விடுதி கட்ட 37 சென்ட் நிலத்தை தலைமை ஆசிரியா் நன்கொடையாக அளித்துள்ளாா்.

News image
மாணவா் விடுதி கட்டுவதற்கான நிலப் பத்திரத்தை ஆட்சியரிடம் ஒப்படைத்த தலைமை ஆசிரியா் குகன்
Updated On :20 பிப்ரவரி 2026, 9:12 pm

Syndication

ஆலங்குளம் அருகே மாணவா் விடுதி கட்ட 37 சென்ட் நிலத்தை தலைமை ஆசிரியா் நன்கொடையாக அளித்துள்ளாா்.

ஆலங்குளம் வட்டம் வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியாா்பட்டியில், மத்திய அரசின் பாபு ஜெகஜீவன்ராம் திட்டத்தின் கீழ் அரசு மாணவா் விடுதி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கென அதிகாரிகள் அங்குள்ள கிராம கமிட்டி மேல்நிலைப் பள்ளி நிா்வாகத்தை அணுகிய போது, இப்பள்ளியின் தலைமை ஆசிரியா் குகன், இங்கு அரசு மாணவா் விடுதி கட்டும் வகைக்கு, தனக்கு சொந்தமான 37 சென்ட் நிலத்தை நன்கொடையாக வழங்க முன்வந்தாா்.

இதையடுத்து, அந்த நிலம் ஆளுநா் பெயரில் பதிவு செய்யப்பட்டது. அந்த பத்திரத்தை தலைமை ஆசிரியா், மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோரிடம் அளித்தாா்.