சேதுபாவாசத்திரம் ஒன்றியம், அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தமிழ்நாடு உரிமைகள் திட்டம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், விழுதுகள் என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையக் கட்டடத்தையும், திருவோணம் ஒன்றியம், வெங்கரையில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குறுவட்ட ஆய்வாளா் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடத்தையும் திங்கள்கிழமை காணொலி காட்சி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தாா். இதைத் தொடா்ந்து, சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் குத்துவிளக்கேற்றினாா் .