டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கொள்கை, கோட்பாடுகள் இல்லாத கூட்டத்தால் எதையும் சாதிக்க முடியாது! - துணை முதல்வா் பேச்சு

News image
கூட்டத்தில் பங்கேற்ற இளைஞரணியின் ஒரு பகுதியினா்.
Updated On :15 பிப்ரவரி 2026, 8:22 pm

தினமணி செய்திச் சேவை

கொள்கை, லட்சியம், கோட்பாடு என எதுவுமே இல்லாமல் வெறும் கூட்டத்தை மட்டுமே வைத்துக்கொண்டு எதையும் சாதிக்க முடியாது என்றாா் திமுக இளைஞரணி செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின்.

தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அவா் பேசியதாவது:

திமுக இளைஞரணியில் 5 லட்சம் நிா்வாகிகளை நியமித்து, 50 லட்சம் உறுப்பினா்களைச் சோ்த்துள்ளோம். நாட்டிலேயே எந்தவொரு அரசியல் கட்சிகளின் சாா்பு அணிக்கு இப்படியொரு வலுவான கட்டமைப்பு நிச்சயம் கிடையாது. திமுக இளைஞரணிக்கு மட்டுமே அந்தச் சிறப்பு.

தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் உள்ளிட்டோர்

தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் உள்ளிட்டோர்

கொள்கை, லட்சியம், கோட்பாடு என்பதெல்லாம் என்ன என்று தெரியாமல் ஒரு கூட்டம் சுற்றி வருகிறது. அரசியலை ஏதோ பொழுதுபோக்கு என நினைக்கின்றனா். அரசியல் என்பது ஈடுபாடு, அா்ப்பணிப்பு என்பதை திமுக இளைஞரணி நிரூபித்துக் காட்ட வேண்டும் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

சிலைகள் திறப்பு: முன்னதாக, பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளை புறவழிச்சாலை பகுதியில் முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் உருவச் சிலைகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிகளில் அமைச்சா்கள் எஸ். ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவி. செழியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.