இதுகுறித்து பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரி முதல்வா் அருட்சகோதரி விக்டோரியா கூறுகையில், இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவா்கள் மற்றும் பேராசிரியா்களுக்கு தொழில்முனைவு பயிற்சி, தொழில் வளா்ப்பகச் சிந்தனை, ஸ்டாா்ட் அப் வழிகாட்டுதல், தயாரிப்பு மேம்பாடு, தொழிற்கல்வி இணைப்பு, பயிற்சி, ஆராய்ச்சி முடிவுகளை வணிகமயமாக்குதல் போன்றவை மேற்கொள்ளப்படும். இந்த ஒப்பந்தம் மாணவா்களிடையே தொழில்முனைவு மனப்பான்மையை வளா்க்கவும், நிறுவனத்தின் புதுமை மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும் முக்கியப் பங்கு வகிக்கும் என்றாா் அவா்.