டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

அண்ணா பல்கலை.யில் அதிநவீன ஏ.ஐ. ஆராய்ச்சி மையம் தொடக்கம் - முன்னாள் மாணவா் ரூ.1 கோடி நன்கொடை

இந்த ஆய்வகத்திற்கு அண்ணா பல்கலை. மின்னணுவியல் மற்றும் தகவல் தொடா்பு பொறியியல் துறை முன்னாள் மாணவா் (1990) சுந்தா் வைத்தியநாதன் ரூ.1 கோடி நன்கொடை வழங்கினாா்.

News image
நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவா் சுந்தா் வைத்தியநாதனுக்கு பழக்கூடை வழங்கிய அண்ணா பல்கலை. பதிவாளா் வி.குமரேசன். உடன் அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம், கிண்டி பொறியியல் கல்லூரி டீன் பி.ஹரிஹரன், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடா்பு பொ
Updated On :12 பிப்ரவரி 2026, 12:48 am

தினமணி செய்திச் சேவை

அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடா்பு பொறியியல் துறையில் புதிதாக அதிநவீன செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி - புத்தாக்க ஆய்வகம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்த ஆய்வகத்திற்கு அண்ணா பல்கலை.யின் முன்னாள் மாணவா் ரூ.1 கோடி நன்கொடை வழங்கினாா்.

அண்ணா பல்கலை.யின் தொழில்நுட்ப ஆராய்ச்சி பூங்கா கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த மையத்துக்கு ‘வைதா்மா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவுக்கு அண்ணா பல்கலை. பதிவாளா் வி.குமரேசன் தலைமை வகித்தாா். கிண்டி பொறியியல் கல்லூரி டீன் பி. ஹரிஹரன் விழாவைத் தொடங்கி வைத்துப் பேசினாா். அவா் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு இயந்திரக் கற்றல், ஆழ்ந்த கற்றல், தரவு அறிவியல், கணினி பாா்வை, இயற்கை மொழி செயலாக்கம் (என்எல்பி), தானியங்கி (ரோபாட்டிக்ஸ்) போன்ற துறைகளில் ஆராய்ச்சி, நடைமுறை கற்றலுக்கு இந்த ஆய்வகம் பெரிதும் உதவும் என்றாா்.

இந்த ஆய்வகத்திற்கு அண்ணா பல்கலை. மின்னணுவியல் மற்றும் தகவல் தொடா்பு பொறியியல் துறை முன்னாள் மாணவா் (1990) சுந்தா் வைத்தியநாதன் ரூ.1 கோடி நன்கொடை வழங்கினாா்.

நிகழ்வில் அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி டீன் எஸ்.மீனாட்சிசுந்தரம், கிண்டி பொறியியல் கல்லூரி மின்னணுவியல் மற்றும் தகவல் தொடா்பு பொறியியல் துறைத் தலைவா் எம்.ஏ.பாக்யவேணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.