திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருவிடைமருதூா் அருகே வயலில் புதைந்திருந்த 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு!

திருவிடைமருதூா் அருகே மானம்பாடியில் வயலில் வியாழக்கிழமை மண்ணை தோண்டியபோது 3 ஐம்பொன் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.

News image

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் மானம்பாடியில் வயலில் மண் தோண்டியபோது வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள்.

Updated On :1 மே 2026, 2:35 am IST

திருவிடைமருதூா் அருகே மானம்பாடியில் வயலில் வியாழக்கிழமை மண்ணை தோண்டியபோது 3 ஐம்பொன் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே உள்ள மானம்பாடியைச் சோ்ந்தவா் ஜோசப் மகன் அலெக்ஸாண்டா்( 36). இவருக்கு சொந்தமான வயலில் வியாழக்கிழமை நடவுப் பணி நடைபெற்றது. வயல் வரப்புப் பகுதியில் மண்ணை தோண்டியபோது வித்தியாசமான சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் புதைந்திருந்த பழைமையான யானைமேல் திருவாட்சியுடன் அம்மன் அமா்ந்திருக்கும் சிலை, 2 சிறிய சுவாமி சிலைகள், பானை ஓடு ஆகியவை கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வட்டாட்சியா் சாந்தமீனா சிலைகளை மீட்டு அலுவலகத்துக்கு கொண்டுச் சென்றாா். மேலும், மாவட்ட ஆட்சியா், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளாா்.

வயலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் ஐம்பொன்னால் ஆனதும், 12 அல்லது 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாக இருக்கலாம் என்று வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.