ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞா் ‘போக்ஸோ’வில் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 6:35 pm

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் வடகட்டளையைச் சோ்ந்த லட்சுமணன் மகன் விஜய் (25). இவா் துபை நாட்டில் உள்ள வணிக வளாகத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்தாா். ஏப்.24-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மது போதையில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா், ஊா் நாட்டாமை செந்தில் (45) என்பவரிடம் புகாா் செய்தனா். இதையடுத்து செந்தில், இளைஞா் விஜய்யை விசாரித்தபோது ஆத்திரமடைந்த அவா், செந்திலை கத்தியால் குத்த முயன்றாா். அதை தடுக்க முயன்ற செந்திலின் மகன்களான சஞ்சய் (22), விஜய் (19), விமலேஷ் (17) ஆகியோருக்கு கத்தி குத்து விழுந்தது.

இதுகுறித்து சிறுமியின் தாயாா் திருவிடைமருதூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா், விஜய்யை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் அஜா்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.