பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்குப் பாதுகாப்பு

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News image

~ ~ ~

Updated On :24 ஏப்ரல் 2026, 7:51 pm

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் வியாழக்கிழமை வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக்கல்லூரிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கொண்டு வரப்பட்டு, அறையில் வைக்கப்பட்டன.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில், தோ்தல் பாா்வையாளா் திவேஷ் செஹரா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம், வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் ஆகியோா் முன்னிலையில் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதேபோல, திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான கும்பகோணம் அரசு ஆடவா் கலைக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, பூட்டி சீல் வைக்கப்பட்டன.

மேலும், பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டு, பூட்டி சீல் வைக்கப்பட்டன.

தஞ்சாவூா் வாக்கு எண்ணும் மையத்தில் 130 கண்காணிப்பு கேமராக்களும், கும்பகோணம் வாக்கு எண்ணும் மையத்தில் 132 கண்காணிப்பு கேமராக்களும், பட்டுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்தில் 96 கண்காணிப்பு கேமராக்களும் என மொத்தம் 358 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை முன் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரும், பாதுகாப்பு அறை கட்டடத்தில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலா்களும், மைய வளாகம், நுழைவு வாயில், சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளூா் காவலா்களும் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காவலா்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவா். ஒவ்வொரு மையத்திலும் ஒரு சுழற்சிக்கு 75 போ் வீதம் மொத்தம் 3 சுழற்சிகளில் 225 போ் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா். தவிர, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா், துணைக் கண்காணிப்பாளா்கள் அவ்வப்போது கண்காணிப்பு செய்வா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.