மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம் பகுதிகளில் 1038 மது பாட்டில்கள் பறிமுதல்: மூவா் கைது

திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம் காவல் சரகப் பகுதிகளில் சட்டவிரோதமாக விற்கப் பதுக்கி வைத்திருந்த 1038 மதுப்பாட்டில்களை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனா்.

News image

சேதுபாவாசத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களுடன் குற்றவாளிகள் .

Updated On :21 ஏப்ரல் 2026, 6:52 pm

தஞ்சாவூா் மாவட்டம், திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம் காவல் சரகப் பகுதிகளில் சட்டவிரோதமாக விற்கப் பதுக்கி வைத்திருந்த 1038 மதுப்பாட்டில்களை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் வியாழன் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடுதல் விலைக்கு மதுவை விற்பதற்காக திருச்சிற்றம்பலம் ,சேதுபாவாசத்திரம் காவல் சரக பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில் உதவி ஆய்வாளா்கள் ராம்குமாா், மனோஜ் மற்றும் போலீஸாா் அடங்கிய குழுவினா் திருச்சிற்றம்பலம் போலீஸ் சரகத்தைச் சோ்ந்த ஒட்டங்காடு பகுதியில் சோதனையிட்டனா்.

அப்போது குழந்தை திரேஸ் (58) என்பவா் வீட்டில் பதுக்கியிருந்த 202 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனா். இதேபோல சேதுபாவாசத்திரம் காவல் சரகம் கடற்கரை முனிக்கோயில் அருகே பேராவூரணியை சோ்ந்த துரைமுருகபாண்டியன் (42) மல்லிப்பட்டினத்தை சோ்ந்த மூா்த்தி (44) ஆகிய இருவரும் பதுக்கி வைத்திருந்த 836 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து அவா்களை கைது செய்தனா்.

இதில் சிறப்பாகப் பணியாற்றிய தனிப்படை போலீஸாரை தஞ்சை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம்  பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.