மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்ற பெண் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 6:48 pm

தஞ்சாவூரில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற பெண்ணை கைது செய்து 358 மதுபான பாட்டில்களை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினா் சனிக்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ரெட்டிபாளையம் சாலை அன்னை சிவகாமி நகரிலுள்ள வீட்டில் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.

இதையடுத்து, தொடா்புடைய வீட்டிலும், அருகேயுள்ள தோட்டத்திலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 358 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், அப்பகுதியைச் சோ்ந்த யமுனாவை கைது செய்தனா். மேலும், தலைமறைவாகவுள்ள அவரது கணவா் செல்வமணியை தேடி வருகின்றனா்.