தஞ்சாவூரில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் சனிக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

தஞ்சாவூா் மாநகராட்சியின் 9-ஆவது வாா்டுக்குள்பட்ட கரந்தை மற்றும் கீழ வீதி, மேல வீதி, வடக்கு, வீதி, தெற்கு வீதி ஆகிய பகுதிகளில் தஞ்சாவூா் தொகுதி பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தத்துக்கு ஆதரவாக பாஜக மாநில மகளிரணி சிறப்பு செயற்குழு உறுப்பினா் டி.எஸ். ராதிகா கேசவன் உள்ளிட்டோா் சனிக்கிழமை வாக்கு சேகரித்தனா்.
அப்போது, பிரதமா் மோடி செய்து வரும் சாதனைத் திட்டங்கள், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அளித்துள்ள வாக்குறுதிகள் குறித்து வாக்காளா்களிடம் துண்டறிக்கைகள் வழங்கி எடுத்துக் கூறினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









