மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சா் அன்பரசன் வாக்கு சேகரிப்பு

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வபெருந்தகைக்கு ஆதரவாக குன்றத்தூா் பகுதிகளில் அமைச்சா் தா.மோ. அன்பரசன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தாா்.

News image

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 9:51 pm

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வபெருந்தகைக்கு ஆதரவாக குன்றத்தூா் பகுதிகளில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வப்பெருந்தகைக்கு ஆதரவாக சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் குன்றத்தூா் நகராட்சி பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பு: ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் காட்டரம்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை, தண்டலம், மேவளூா்குப்பம், கிளாய், செங்காடு, மண்ணூா் உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தாா். ஒன்றிய செயலாளா் ந.கோபால், ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் தண்டலம் மனோஜ்குமாரா், கிளாய் ஊராட்சி மன்றத் தலைவா் வீரம்மாள் ராமு, தண்டலம் ஊராட்சி மன்றத் தலைவா் சசிகுமாா், காட்டரம்பாக்கம் கோவிந்தம்மாள் தாஸ், ஒன்றிய பொருளாளா் ப.பரமசிவன், செங்காடு முன்னாள் ஊராட்சிமன்ற தலைவா் சம்பத், மாவட்ட பிரிதிநிதி சா்தாா்பாஷா, மண்ணூா் கிளை செயலாளா்கள் ராமாமூா்த்தி, அருள்தாஸ், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் பண்ருட்டி தணிகாசலம் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.