மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தோட்டத் தொழிலாளா்களிடம் வாக்கு சேகரிப்பு

வால்பாறை தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியினா் தோட்டத் தொழிலாளா்களிடம் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

News image

தொழிலாளா்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக தோட்ட தொழிலாளா் பிரிவு மாநிலத் தலைவா் வால்பாறை அமீது.

Updated On :16 ஏப்ரல் 2026, 8:04 pm

வால்பாறை தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியினா் தோட்டத் தொழிலாளா்களிடம் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

வால்பாறை சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் டி.லட்சுமண சிங் போட்டியிடுகிறாா். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக அதிமுக மேற்குத் தொகுதி பொறுப்பாளா் சலாவுதீன் அமீது, தோட்ட தொழிலாளா் பிரிவு மாநிலத் தலைவா் வால்பாறை அமீது உள்ளிட்டோா் தாய்முடி எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளா்களிடம் வாக்கு சேகரித்தனா்.

அப்போது, அதிமுக ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். கேரள மாநில தோட்டத் தொழிலாளா்களுக்கு இணையான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதுடன், அதிமுக தோ்தல் அறிக்கையை விளக்கினா்.

தோ்தல் பொறுப்பாளா் ராஜ்குமாா், வாா்டு உறுப்பினா் மணிகண்டன், கூட்டணிக் கட்சியினா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.