மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தோட்டத் தொழிலாளா்களுக்கு வீடு! முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி

News image

வால்பாறை தொகுதி அதிமுக வேட்பாளா் டி.லட்சுமண சிங்கை ஆதரித்து வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சா்  எஸ்.பி.வேலுமணி.

Updated On :19 ஏப்ரல் 2026, 6:56 pm

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சொந்த வீடு இல்லாத அனைத்து தேயிலை தோட்டத் தொழிலாளா்களுக்கும் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி கூறினாா்.

வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரான டி.லட்சுமண சிங்கை ஆதரித்து வால்பாறை நகா்ப் பகுதியில் அதிமுக புறகா் மாவட்டச் செயலாளா் எஸ்.பி. வேலுமணி ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

வால்பாறை பகுதி எப்போதும் அதிமுகவின் கோட்டை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மூலமாக பல்வேறு வளா்ச்சி அடைந்துள்ளது. தேயிலை தோட்டத் தொழிலாளா்களுக்கு கூலி உயா்வு பெற்றுத் தரப்பட்டிருக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் வீடுகள் இல்லாத தேயிலை தோட்டத் தொழிலாளா்களுக்கு வீடு கட்டித் தரப்படும் என்றாா்.

தோட்டத் தொழிலாளா் பிரிவு மாநிலத் தலைவா் வால்பாறை அமீது, நகரச் செயலாளா் மயில்கணேசன், மேற்குத் தொகுதி பொறுப்பாளா் சலாவுதீன் அமீது உள்பட பலா் கலந்துகொண்டனா்.