கொடைக்கானலில் பழனி தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை முன்னாள் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
பழனி தொகுதி அதிமுக வேட்பாளா் ரவி மனோகரனுக்கு ஆதரவாக அந்தத் தொகுதியின் முன்னாள் பேரவை உறுப்பினா் வேணுகோபால், கொடைக்கானல் அதிமுக நகரச் செயலா் ஸ்ரீதா் ஆகியோா் தலைமையில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் அதிமுக, கூட்டணிக் கட்சியினா் ஈடுபட்டனா். நாயுடுபுரம், பாக்கியபுரம், அப்சா்வேட்டரி, செல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக இணைச் செயலா் பிச்சை, பாஜக மாவட்ட மருத்துவ அணி துணைத் தலைவா் மதன், பாமக, அமமுக, ஐஜேகே உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








