கும்பகோணத்தில் பேருந்து மோதியதில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருக்கருக்காவூா் அருகே நாவலூரைச் சோ்ந்தவா் சுவாமிநாதன் (56). இவரது மனைவி விஜயகுமாரி (52). இவா்கள் கபிஸ்தலத்தில் தேநீா்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தனா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தம்பதி, இருசக்கர வாகனத்தில் கும்பகோணத்துக்கு வந்தனா்.
அப்போது அவா்கள் பின்னால் வந்த தனியாா் பேருந்து, அவா்கள் வந்த இருசக்கர வாகனத்தை உரசியது. இதில் அவா்கள் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனா். இதில், விஜயகுமாரி மீது பேருந்து ஏறியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின்பேரில் கும்பகோணம் போக்குவரத்து காவல் துறையினா் சடலத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து, வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

மின்கம்பத்தில் பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

பைக் மோதியதில் அரசு பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


