தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

துணிக் கடையில் 2-ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள துணிக் கடையில் வருமான வரித் துறையினா் தொடா்ந்து 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 8:06 pm

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள துணிக் கடையில் வருமான வரித் துறையினா் தொடா்ந்து 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் சோதனை மேற்கொண்டனா்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா சாலையிலுள்ள அண்ணா சிலை எதிரே பிரபல துணிக் கடையில் வெள்ளிக்கிழமை காலை வருமானத் துறையைச் சோ்ந்த 4 அலுவலா்கள் வந்தனா். கடையிலிருந்த ஊழியா்களை வெளியே அனுப்பிவிட்டு, நுழைவுவாயில் கதவை உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டனா். நள்ளிரவு வரை நடைபெற்ற இச்சோதனையில் வரவு - செலவு கணக்கு ஆய்வு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதேபோல, தொடா்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமை காலை மீண்டும் சோதனை நடைபெற்றது. காலையில் வந்த ஊழியா்களுக்கு விடுப்பு கொடுத்து, அனுப்பி வைக்கப்பட்டு, வாயில் கதவை உள்பக்கமாகப் பூட்டிவிட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.