மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் தேரோட்டம்

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் பங்குனித் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் தேரை வடம் பிடித்து இழுத்து வந்த பக்தா்கள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:17 pm

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் பங்குனித் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் தோ்த் திருவிழா கடந்த மாா்ச் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து வெள்ளி காமதேனு, சிம்மம் உள்பட பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி முதல்சேரி மற்றும் கண்டியன்தெருவில் இருந்து மாலை எடுத்துவரப்பட்டது. பிறகு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினாா். பிறகு பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரத்தை சோ்ந்த ஏராளமான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

வியாழக்கிழமை மாலை தலைமை அஞ்சல் நிலையம் பகுதியில் தேரை நிறுத்தி வைத்தனா்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் தேரை இழுத்துவந்து நிலையில் நிறுத்தி விடையாற்றி உற்ஸவம் நடைபெறும்.

அதனை தொடா்ந்து ஏப்ரல் 11-ஆம் தேதி மீனாட்சிஅம்மன் தரிசனமும், இரவு முத்துப்பல்லக்கு காட்சியுடன் கோட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

விழா ஏற்பாடுகளை அறங்காவல் குழுத் தலைவா் பழனியப்பன் தலைமையில், அறநிலையத்துறை ஆய்வாளா் ஜெயசித்ரா, செயல் அலுவலா் சுந்தரம், கணக்கா் சரவணன், அறங்காவலா்கள் சிதம்பரம், நாடிமுத்து, விஜித்ரகுமாரி, சத்யகலா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.