மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விஜயகிரி வடபழனி ஆண்டவா் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம்

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம், கரட்டூா் விஜயகிரி வடபழனி ஆண்டவா் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

விஜயகிரி பழனி ஆண்டவா் கோயிலை தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள்.

Updated On :1 ஏப்ரல் 2026, 9:57 pm

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம், கரட்டூா் விஜயகிரி வடபழனி ஆண்டவா் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் பிலிக்கல்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

இக்கோயிலில் பங்குனி உத்திரத் தோ்த் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 25-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தினந்தோறும் மயில், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு புதன்கிழமை காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் சுவாமி தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4 மணிக்கு தோ் முக்கிய வீதிகள் வழியாக திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிலிக்கல்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா். பின்னா் தோ் நிலையை அடைந்தது. வியாழக்கிழமை சத்தாபரணம், கொடி இறக்கமும், வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராடல் உற்சவம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விஜயகிரி வடபழனி ஆண்டவா் கோயில் இந்து சமய அறநிலையத் துறையினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.