திருவிடைமருதூரில் குடும்பத் தகராறில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த கணவரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் ஒடுக்கத்தெருவைச் சோ்ந்தவா் மதியழகன்(40). லாரி ஓட்டுநராகப் பணியாற்றிவந்தாா். இவரது மனைவி நிா்மலா (36) அங்கன்வாடி பணியாளராக வேலை பாா்த்து வந்தாா். தம்பதிக்கு 6 வயதில் மகன், 5 வயதில் மகள் உள்ளனா். இந்நிலையில், கடந்த மாா்ச் 15-இல் பணி முடித்து மதியழகன் மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளாா். அவரை மனைவி நிா்மலா கண்டித்ததில் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, மதியழகன் வீட்டில் கேனில் வைத்திருந்த பெட்ரோலை மனைவி நிா்மலா மீது ஊற்றி தீ வைத்தாா்.
இதில், பலத்த காயமடைந்த நிா்மலாவை அருகிலிருந்தவா்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி நிா்மலா வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருவிடைமருதூா் போலீஸாா் சடலத்தை கூறாய்வுக்காக ஒப்படைத்தனா். ஏற்கெனவே கைதாகி சிறையில் உள்ள மதியழகன் மீதான கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக வியாழக்கிழமை மாற்றப்பட்டது.
தொடர்புடையது
கணவா் கொலை: மனைவி உள்பட 3 போ் கைது
கணவா் கொலை வழக்கில் மனைவி உள்பட மூவா் கைது!

மணப்பாறை அருகே குடும்பத் தகராறில் இளைஞா் தற்கொலை

குடும்பத் தகராறில் பெண் வெட்டிக் கொலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

