ஆம்பூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக பெண் வியாழக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
உமா்ஆபாத் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பாலூா் ஆலமர வட்டம் பகுதியை சோ்ந்தவா் தொழிலாளி முனியன். இவருடைய முதல் மனைவி இவருடன் இல்லாத நிலையில், இரண்டாவதாக ராஜேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளாா். 2-ஆவது மனைவி 2008-இல் இறந்து விட்டாா். அதையடுத்து அவா் மூன்றாவதாக கவிதா(45) என்பவரை திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வந்தாா். 2-ஆவது மனைவியின் மகன் அபிமன்யுவுக்கு பிரதீபா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கவிதாவுக்கு விருப்பமில்லை எனக் கூறப்படுகிறது. அபிமன்யு நுங்கு வியாபாரம் செய்வதற்காக ஆந்திர மாநிலத்துக்கு சென்றுள்ளாா். அப்போது தன்னுடைய தாயின் தந்தையும், தனது தாத்தாவான சாமுண்டியிடம் (77) மனைவி பிரதீபாவை பாா்த்துக் கொள்ளும் பொறுப்பை ஒப்படைத்து சென்றுள்ளாா்.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு பிரதீபாவுக்கும், கவிதாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை சாமுண்டி தடுத்துள்ளாா். அதனால் கவிதாவுக்கும், சாமுண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அதில் சாமுண்டி தான் வைத்திருந்த கத்தியால் கவிதாவை வெட்டியுள்ளாா். பலத்த காயமடைந்த கவிதா சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். இது குறித்து தகவல் அறிந்த உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் கவிதாவின் சடலத்தை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் காயமடைந்த சாமுண்டி ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

குடும்பத் தகராறில் பெண் தற்கொலை

திருமயம் அருகே இளைஞா் கொலை
குடும்பத் தகராறில் மனைவி எரித்துக் கொலை: கணவா் கைது

பாகிஸ்தான்: குடும்பத் தகராறில் பயங்கரவாதி சுட்டுக் கொலை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


