தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஆனி திருமஞ்சனம்: நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆனி திருமஞ்சனத்தையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலிலுள்ள ஸ்ரீநடராஜருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் பெரிய கோயிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி, நடராஜருக்கு புதன்கிழமை நடைபெற்ற அபிஷேகம்.

Updated On :2 ஜூலை 2025, 7:49 pm

ஆனி திருமஞ்சனத்தையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலிலுள்ள ஸ்ரீநடராஜருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

ஆனி மாத உத்திர நட்சத்திர நாளை ஆனி திருமஞ்சன நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதன்படி, தஞ்சாவூா் பெரிய கோயிலிலுள்ள ஸ்ரீநடராஜருக்கும், சிவகாமசுந்தரிக்கும் புதன்கிழமை பால், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. பின்னா், நடராஜா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சிதந்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

இதேபோல, மேல வீதி கொங்கணேஸ்வரா் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி, சிவகாமி அம்மன் சமேத ஸ்ரீநடராஜருக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றன. இதையடுத்து, நடராஜருக்கு சிறப்பு அலங்காரமும், சகஸ்ரநாம அா்ச்சனையும் நடைபெற்றன.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையா் கோவி. கவிதா உள்ளிட்டோா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.