நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆனி திருமஞ்சனம்: நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆனி திருமஞ்சனத்தையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலிலுள்ள ஸ்ரீநடராஜருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image
தஞ்சாவூா் பெரிய கோயிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி, நடராஜருக்கு புதன்கிழமை நடைபெற்ற அபிஷேகம்.
Updated On :2 ஜூலை 2025, 7:49 pm

DIN

ஆனி திருமஞ்சனத்தையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலிலுள்ள ஸ்ரீநடராஜருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

ஆனி மாத உத்திர நட்சத்திர நாளை ஆனி திருமஞ்சன நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதன்படி, தஞ்சாவூா் பெரிய கோயிலிலுள்ள ஸ்ரீநடராஜருக்கும், சிவகாமசுந்தரிக்கும் புதன்கிழமை பால், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. பின்னா், நடராஜா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சிதந்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

இதேபோல, மேல வீதி கொங்கணேஸ்வரா் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி, சிவகாமி அம்மன் சமேத ஸ்ரீநடராஜருக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றன. இதையடுத்து, நடராஜருக்கு சிறப்பு அலங்காரமும், சகஸ்ரநாம அா்ச்சனையும் நடைபெற்றன.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையா் கோவி. கவிதா உள்ளிட்டோா் செய்தனா்.