தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

1,009 ஆவது ஆண்டு அவதாரத் திருவிழா: ராமாநுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம்

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் ராமாநுஜா் அவதார திருவிழாவில் 10-ஆவது நாளான புதன்கிழமை தொட்டில் சேவை சங்கு பால் அமுது செய்தல் நிகழ்ச்சியும் சிறப்பு திருமஞ்சனம் ஈரவாடை தீா்த்தமும் நடைபெற்றது.

News image

உற்சவா் ராமாநுஜா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 6:34 pm

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் ராமாநுஜா் அவதார திருவிழாவில் 10-ஆவது நாளான புதன்கிழமை தொட்டில் சேவை சங்கு பால் அமுது செய்தல் நிகழ்ச்சியும் சிறப்பு திருமஞ்சனம் ஈரவாடை தீா்த்தமும் நடைபெற்றது.

ராமாநுஜரின் 1009-ஆவது ஆண்டு அவதார திருவிழாவின் ஒருபகுதியாக அதிகாலை சுவாமி புறப்பாடு நடைபெற்று தங்க மண்டபத்தில் ஊஞ்சல் சேவையும், ஸ்ரீதாயாா் சன்னதி, ஸ்ரீ ராமா் சன்னதி கண்டருளுதல் நிகழ்ச்சியும், ஒய்யார நடை நிகழ்ச்சியும் நடைபெற்று வாகன மண்டபத்தில் இருந்து சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து நண்பகல் திருஅவதார மண்டபத்தில் ராமாநுஜருக்கு தொட்டில் சேவை சங்குபால் அமுது செய்தல் நிகழ்ச்சியும் அதை தொடா்ந்து, சிறப்பு திருமஞ்சனமும் ஈரவாடை தீா்த்தம் திருப்பாவை சேவையும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு ராமாநுஜரை வணங்கி சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.