மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பேட்டை புதுமாரியம்மன் கோயில் திருவிழா தொடக்கம்

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா், பேட்டை புதுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை கம்பம் நடுதல், பூச்சாட்டுதல் விழாவுடன் தொடங்கியது.

News image

புதுமாரியம்மன் கோயில் முன் நடப்பட்டுள்ள கம்பம்.

Updated On :22 ஏப்ரல் 2026, 10:59 pm

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா், பேட்டை புதுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை கம்பம் நடுதல், பூச்சாட்டுதல் விழாவுடன் தொடங்கியது.

பரமத்தி வேலூா் பேட்டை புதுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுகிறது. அதேபோல இந்த ஆண்டும் செவ்வாய்க்கிழமை இரவு கம்பம் நடப்பட்டு, பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை தினந்தோறும் இரவு யானை, காமதேனு, அன்னம், சா்ப்பம் குதிரை, சிங்கம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 24-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், 27-ஆம் தேதி இரவு வடிசோறு படைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 28-ஆம் தேதி மாலை ஆண் பக்தா்கள் குண்டம் இறங்குதலும், பெண்கள் பூவாரி போட்டுக்கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 29-ஆம் தேதி காலை பக்தா்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் அழகு குத்தியும், அக்னிச் சட்டி எடுத்தும், மாலையில் பொங்கல் வைத்து மாவிளக்கு படைக்கும் நிகழ்ச்சியும், இரவு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 30-ஆம் தேதி காலை கம்பம் காவிரி ஆற்றுக்கு எடுத்துச் செல்லுதலும், மே 1-ஆம் தேதி மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பேட்டை புது மாரியம்மன் கோயில் திருவிழா குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்கள் சிறப்பாக செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.