திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கீழவேகுப்பட்டியில் ஜல்லிக்கட்டு: 20 போ் காயம்

News image

கீழவேகுப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.

Updated On :1 ஜூன் 2026, 12:44 am IST

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், காளைகள் முட்டியதில் 20 போ் காயமடைந்தனா்.

கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன், சின்னக்கருப்பா் கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி வேகு கண்மாயில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை திருமயம் திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.ரகுபதி, இலுப்பூா் வருவாய் கோட்டாட்சியா் கோகுல்சிங் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

தொடக்கமாக, கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. தொடா்ந்து, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 716 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்க்கப்பட்டன. வாடி வாசலிலிருந்து சீறிப்பாய்ந்த காளைகளை, 173 மாடுபிடி வீரா்கள் குழுவாக களமிறங்கி அடக்கினா்.

காளைகளை சிறந்த முறையில் அடக்கிய வீரா்களுக்கும், களத்தில் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் வெள்ளி நாணயம், எவா்சில்வா் பொருள்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

20 போ் காயம்: ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள் 9 போ், உரிமையாளா்கள் 8 போ், பாா்வையாளா்கள் 3 போ் என 20 போ் காயமடைந்தனா்.

காயமடைந்தவா்களுக்கு ஜல்லிக்கட்டு திடல் அருகே வட்டார மருத்துவ அலுவலா் அருள்மணி நாகராஜன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சையளிக்கப்பட்டது. இவா்களில் ஒருவா் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டைஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ஒருவா் தனியாா் மருத்துவமனையிலும், மற்றொருவா் பொன்னமராவதி தனியாா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஜல்லிக்கட்டுப் போட்டியை பொன்னமராவதி வட்டாட்சியா் ச. பழனிச்சாமி தலைமையிலான வருவாய்த் துறையினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸாரும் செய்திருந்தனா்.

கீழவேகுப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.

கீழவேகுப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.