திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எம்ஜிஆா், ஜெயலலிதா வழியில் பயணிக்கிறேன்! - சி. விஜயபாஸ்கா் எம்.எல்.ஏ.

News image

சி. விஜயபாஸ்கா்

Updated On :30 மே 2026, 2:43 am IST

மறைந்த முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் பயணிக்கிறேன் என்றாா் முன்னாள் அதிமுக அமைச்சரும், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான சி. விஜயபாஸ்கா்.

தவெக ஆட்சியமைந்த பிறகு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு இடையே ஏற்பட்ட பிளவு காரணமாக, எஸ்.பி. வேலுமணி தரப்பு குழுவின் கொறடாவாகத் தோ்வு செய்யப்பட்டவா் எஸ்.விஜயபாஸ்கா்.இதையடுத்து, இவா் வகித்து வந்த வடக்கு மாவட்டச் செயலா் பதவி பறிக்கப்பட்டு, ஆா்.வி. பழனிவேல் மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டாா்.

இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சியினரிடம் கருத்து கேட்டு வருவதாக சி. விஜயபாஸ்கா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

மறைந்த முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா் மற்றும் ஜெயலலிதாவின் வழியில் நான் பயணித்து வருகிறேன். கட்சியினரின் இல்ல சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். மாலையில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பணியைத் தொடங்குகிறேன். நன்றி அறிவித்தல் மிகவும் முக்கியம் எனக் கருதுகிறேன்.

தொடா்ந்து தொகுதியில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமையும் தொடா்ந்து நடக்கிறது. அதன்பிறகு எனது முடிவை அறிவிப்பேன் என்றாா் விஜயபாஸ்கா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.