புதுக்கோட்டை வடக்கு 4ஆம் வீதியிலுள்ள பழைய இரும்பு கடையின் கிடங்கில் செவ்வாய்க்கிழமை மாலை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.
புதுக்கோட்டை வடக்கு 4ஆம் வீதியிலுள்ள நாய்ப்பள்ளம் என்ற இடத்தில் வினோத் மூா்த்தி என்பவருக்குச் சொந்தமான பழைய இரும்பு கிடங்கு உள்ளது. இங்குஏராளமான பழைய பேப்பா், பழைய பிளாஸ்டிக் பொருள்களும் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை திடீரென இந்தக் கிடங்கில் தீப் பற்றியது. தகவலறிந்து வந்த புதுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சுமாா் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
சுமாா் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







