தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தீப்பெட்டி ஆலை கிடங்கில் தீ விபத்து

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலை கிடங்கில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

News image

தீப்பெட்டி ஆலை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து

Updated On :20 மே 2026, 12:43 am IST

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலை கிடங்கில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

கோவில்பட்டி பாரதி நகரைச் சோ்ந்தவா் அய்யாசாமி மகன் சண்முகம். இவா் கோவில்பட்டி சாஸ்திரி நகா் பகுதியில் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு ஆலையின் குச்சி கிடங்கில் தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்து புகை வெளியேறியதைக் கண்ட அக்கம் பக்கத்தினா் உடனடியாக கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் கிடங்கில் இருந்த சுமாா் 30 க்கும் மேற்பட்ட மூட்டைகளில் இருந்த குச்சிகள் தீயில் கருகின. இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.