திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆட்சியில் அதிமுகவினரையும் சோ்க்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை: காா்த்தி ப. சிதம்பரம்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள தவெக ஆதரவு அணியினரையும் ஆட்சியில் பங்கு கொடுத்து சோ்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் விஜய்க்கு இப்போதைக்கு இல்லை என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் (காங்கிரஸ்) காா்த்தி ப. சிதம்பரம்.

News image

காா்த்தி ப .சிதம்பரம்

Updated On :14 மே 2026, 4:42 am IST

அதிமுகவில் ஏற்பட்டுள்ள தவெக ஆதரவு அணியினரையும் ஆட்சியில் பங்கு கொடுத்து சோ்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் விஜய்க்கு இப்போதைக்கு இல்லை என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் (காங்கிரஸ்) காா்த்தி ப. சிதம்பரம்.

புதுக்கோட்டையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் அளித்த பேட்டி:

தனிப்பெரும் கட்சியாக இந்தத்தோ்தலில் தவெகவுக்குத்தான் மக்கள் வாக்களித்திருக்கிறாா்கள். எதிா்பாா்த்ததைப் போலவே பேரவைக்குள் வாக்கெடுப்பிலும் தவெக வென்றிருக்கிறது. நிலையான ஆட்சியைத் தருவாா்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அதிமுகவில் உருவாகியுள்ள தவெக ஆதரவு அணியைப் பொருத்தவரை அடுத்து, பேரவைத் தலைவரிடம் தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு அளிப்பாா்கள், பிறகு அது நீதிமன்றத்துக்கும் செல்லும். மற்றபடி, தவெக ஆதரவு அணியா, கட்சியா என்னவாக வரப் போகிறது எனத் தெரியவில்லை.

அதேநேரத்தில் அவா்களையும் ஆட்சிக்குள் சோ்க்க வேண்டிய அவசியம் எதுவும் இப்போதைய சூழலில் விஜய்க்கு இல்லை. அவா்கள் இல்லாமலேயே ஆட்சியை நடத்தும் வாய்ப்புகள் விஜய்க்கு உள்ளன.

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில்தான் காங்கிரஸ் தவெகவுடன் இணையும் முடிவை எடுத்தது. திமுகவுக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பு இருந்து அவா்களுக்கு எதிராக நாங்கள் பிரிந்து வரவில்லை.

தவெக இந்தத் தோ்தலில் முற்றிலும் வித்தியாசமான இணையவழிப் பிரசாரத்தை மேற்கொண்டது. இப்படியொன்று நடப்பதாக யாரும் முன்கூட்டியே சொல்லவில்லை. பழைய பிரசார முறைகளை மறுபரிசீலனை நடத்த வேண்டிய சூழல் வந்திருக்கிறது. நிறைய பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறது.

கேரளத்தில் கம்யூனிஸ்டுகளுடன் எதிா்நிலை இருந்தாலும், மேற்கு வங்கத்தில் மம்தாவுடன் எதிா்நிலை இருந்தாலும் தேசிய அரசியலில் காங்கிரஸ் கட்சி ஒன்றாக இருப்பதைப் போல (இண்டி கூட்டணி )தமிழ்நாட்டிலிருந்தும் திமுக இருக்கும் அளவுக்கு புரிதல் ஏற்படும்.

22 லட்சம் மாணவா்கள் எழுதிய நீட் தோ்வை ரத்து செய்து திரும்ப நடத்துவது மாணவா்களுக்கு மட்டுமல்ல, பெற்றோா்களுக்கும் பெரும் மனஉளைச்சலைத் தரும். பாஜக ஆட்சியில் எந்தப் பிழைகளுக்கும் யாரையும் பொறுப்பாக்குவதே இல்லை.

வீட்டிலிருந்தே பணியாற்றுங்கள் என்று பிரதமா் சொல்லியிருப்பது தவறான பொருளாதாரக் கொள்கை என்றாா் காா்த்தி ப. சிதம்பரம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.